Sunday, July 29, 2012

அதிகாரம் : வரலாறும் பகிர்வும்


அதிகாரத்தின் வரலாறு.
1. குடும்ப அமைப்பு மற்றும் குழுக்களிடையே அதிகாரம்.
2. நிலப்பிரபுத்துவகால அதிகாரம். (மன்னராட்சி மூலமான மத நிறுவனங்களின் அதிகாரம்)
3. அரசு என்ற எண்ணக்கருவும் அதிகாரமும்.
4. தேசிய இனங்களை மையப்படுத்திய அரசும் அதிகாரமும்.
5. பூர்த்தியடையாத தேசிய அபிலாசைகளும் அதிகாரப் பரவலாக்கமும்
அரசுகளை மையப்படுத்திய அதிகாரப் பரவலாக்கல் என்னும் எண்ணக்கரு
1. தேசிய இனங்களை மையப்படுத்திய அதிகாரப் பரவலாக்கல்.
2. பின்காலனித்துவ காலப்பகுதி – அரசு – அதிகாரப் பரவலாக்கல்
3. பிரதேச அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கல்
4. குடியுரிமையும் அதிகாரப் பரவலாக்கமும்
5. அடையாள அரசியலும் அதிகாரப் பரவலாக்கலும்
இலங்கையில் அதிகாரப் பரவலாக்கல்.
1. இலங்கை அரசியலில் அதிகாரத்தின் வரலாறு.
2. அதிகாரப் பகிர்வுக்கான கதையாடல்கள்
3. அதிகாரத்தைக் கையகப்படுத்தும் நோக்கிலான போராட்டம்
4. திம்பு உடன்படிக்கை, 13 அம் சட்டச் சீர்திருத்தம், சந்திரிக்காவின் தீர்வுப்பொதி, இடைக்கால நிர்வாக சபை மற்றும் சமஸ்டி பற்றிய உரையாடல்கள்
5. இலங்கையின் இன்றைய அதிகார வரைபடம்
எவ்வாறான தீர்வு பொருத்தமாக இருக்க முடியும்/கூடும்
1. நவீன இறைமைக் கோட்பாடும் தீர்வும்
2. தென்னாசியப் பிராந்தியத்தில் காணப்படும் அதிகாரப் பரவலாக்கம்
3. இந்திய மேலாதிக்கமும் 13 ஆம் சட்டக் கோவையும்
4. பின் – அடையாள அரசியல் காலமும் அதிகாரப் பரவலாக்கலும்
5. குடியுரிமை, மனித உரிமைகள், குழு அடையாளம், பால் சார்ந்த அடையாளங்கள் மற்றும் இனத்துவ ரீதியிலான அதிகார வரைபடம்.
மார்க்சிய நோக்கிலான அதிகார வரைபடம், மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகள் மற்றும் அதிகாரச் சமன்பாடு.

Thursday, July 5, 2012

அன்னிய நிதி


அன்னிய நிதி தொடர்பான உரையாடல்கள் சரியான புள்ளியை நோக்கிப் போகவில்லை. ஜெயமோகனால் உருவாக்கபப்ட்ட அருமையான சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுள்ளது. மரபார்ந்த இடதுசாரிகள் கொண்டிருந்த 'அன்னியநிதி' தொடர்பான கூற்றுக்கள் வலுவிழந்து காணப்படுகின்றன. அவர்களது ஒட்டுமொத்த நிராகரிப்பு என்ற போக்கு சமூகத்தில் எடுபடாமல் போனதோடு ஆபத்தான / ஆபத்தற்ற நிதி மூலங்கள் என்ற வேறுபாடுகளைக் கூடச் சுட்டிக்காட்டத் தவறியுள்ளன. அவ்வாறே அன்னிய நிதி தொடர்பான விமர்சனமற்ற வாதங்களும் ஆபத்தானவையே. 

நிதி மூலங்களை வேறுபடுத்தி அறிவது மிக முக்கியமானது. நேரடி உளவுப்பணிகள், கருத்தியல் உருவாக்கங்கள், மனிதாபிமானப் பணிகள், கல்விப் பணிகள் என்ற வெவ்வேறு துறைகளில் இந்நிதி இயங்குகின்றது. இவற்றை வேறுபடுத்தாமல் ஒட்டு மொத்தமாக நிராகரித்துவிட்டோ அல்லது விமர்சனமற்று ஏற்றுக் கொண்டுவிட்டோ போக முடியாது.

உதாரணமாக நான் தொடர்புபட்டுள்ள Knowledge preservation தொடர்பான செயற்பாடுகளில் மிக முக்கியமாக 3 விடயங்களைப் பார்க்க முடியும்.
* செயற்பாட்டின் வெளிப்படைத்தன்மை ( Transparency )
* வெளிப்பாடுகளின் திறந்த அணுக்கம் ( Open Access )
* அறிவு மீளுருவாக்கத்திற்கான அனுமதி ( Creative Common Licence )
மேற்படி மூன்று விடயங்களையும் மக்கள் நலன் சார்ந்து பொருத்திப் பார்த்தால் போதுமானது என நம்புகின்றேன்.

இவ்வாறு சகல துறைகளும் அன்னிய நிதிக் கையாளுகை தொடர்பான மக்கள் நலன் சார்ந்த சட்டகத்தை உருவாக்கும் போது அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளைக் குறைக்க முடியும் என நம்புகின்றேன். ஜெயமோகனுடைய 'பொதுமைப்படுத்தல்களும்' சுகுணா திவாகரின் 'தொட்டனைத்தூறும்' கட்டுரைகளும் அன்னிய நிதிய நிதியை எதிர்கொள்ள அல்லது அன்னிய நிதியின் பாதங்களை எதிர்கொள்ள சரியான சட்டகங்களை அமைப்பதற்கு உதவாது என்று நம்புகின்றேன்.

இந்துத்துவம் எதிர் சிறுதெய்வ வழிபாடு


@Rajan Kurai : காலம்தோறும் மாறிவரும் ஜாதிகளின் சமூகப்பாத்திரத்தை எப்படி எதிர்கொள்வது என்பதை தொடர்ந்து மறுபரிசீலனை செய்வதே சிந்தனைகளுக்கு முக்கியமானதாகும். "ஜாதியின் குறியியக்கம்" என்ற என்னுடைய கட்டுரை அந்த நோக்கில் எழுதப்பட்டதுதான். எனவே ஜாதியை காரணம் காட்டி நமது பண்பாட்டின் பல்வேறு அம்சங்களிலிருந்து நாம் துண்டித்துக்கொள்ள முடியாது. இதெல்லாம் குறித்து நாம் நிறைய விவாதிக்கலாம்; தொடர்ந்து ஆய்வுச்செயல்பாடுகள்,கோட்பாட்டாங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன.

@Gnani Sankaran : ராஜன் குறை , பண்பாட்டின் அம்சங்களை ஜாதியிடமிருந்து துண்டிப்பது எப்படி என்பதுதான் அராவும் நானும் முன்வைக்கும் முக்கியக் கேள்வி. அது பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடப்பது ஆரோக்கியமான போக்கேயாகும்.

மேற்படி உரையாடலில் கவனத்தை ஈர்த்த விடயங்களை மேலே குறிப்பிட்டுள்ளேன். இப்புள்ளியை மையப்படுத்திய உரையாடல்கள் தமிழ்ச்சூழலில் நிகழ்ந்துள்ளதா என்பதை அறிய ஆவல். மேலும், துறை சார்ந்த முன்னேற்றத்திற்கப்பால் அவை அரசியல் தளத்திற்கு கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏதாவது உள்ளதா?

பெரியாரியலும் நாட்டார் தெய்வங்களும் : http://tinyurl.com/d62x4g5
நிறுவனமயப்பட்ட இந்துத்துவத்தையும் சிறுதெய்வ வழிபாட்டு மரபுகளையும் வேறுபடுத்தும் செயற்பாடுகளை தொ. பரசிவன் அவர்கள் சரியாகச் செய்துள்ள போதிலும் பெரியாரும் அதையே வலியுறுத்தினார் என்பதற்கான சரியான ஆதாரங்களைத் தரவில்லை என்று நம்புகின்றேன். அல்லது, நிறுவனமயப்பட்ட இந்துத்துவத்திற்கு எதிரான பெரியாருடைய நிலைப்பாட்டை பரமசிவன் அவர்களே தனது நிலைப்பாட்டிற்கு நீட்டி வளர்த்துச் செல்கின்றாரா எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது.