Thursday, March 8, 2012

ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்



புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவர்களுள் ஒருவரான கணேசன் ஐயர் எழுதிய 'ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்' இப்போது நூலுருவில் படித்து முடித்தேன். இனம்புரியாத சோகம் மனசை அப்பிக் கொண்டுள்ளது. பத்தாவது வயதில் 'புதியதோர் உலகம்' ஐ வாசித்து முடித்து என்ன உணர்விற்கு ஆட்பட்டேனோ - எவ்வாறு துவண்டு போனேனோ - அண்ணளவாக 20 வருடங்களின் பின்னர் 'ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்' படித்து முடித்ததும், அதே உணர்வு - அதே ஆற்றாமை தான் எஞ்சியுள்ளது.

இடையில் மடித்துக் கட்டப்பட்ட சாரமும், பெரும்பாலான பட்டன்களைத் திறந்து விட்டபடியான தோரணையும், தலைநிறைந்த கலைந்த கேசமும் சேர்ந்து உருவாக்கிய சிறுவயதுக் கதாநாயக படிமங்கள் - சிறுவயது முதல் தேடியலைந்த கதாநாயகர்கள் தோல்வியால் துவண்டு போவதை மீண்டும் ஒருமுறை பார்க்க நேரிட்டது வருத்தமாயிருக்கின்றது. எல்லா கதாநாயகர்களும் ஏதோவொரு காரணத்தால் கதாநாயகிகளைக் கைவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

http://inioru.com/?p=26525