Thursday, July 5, 2012

அன்னிய நிதி


அன்னிய நிதி தொடர்பான உரையாடல்கள் சரியான புள்ளியை நோக்கிப் போகவில்லை. ஜெயமோகனால் உருவாக்கபப்ட்ட அருமையான சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுள்ளது. மரபார்ந்த இடதுசாரிகள் கொண்டிருந்த 'அன்னியநிதி' தொடர்பான கூற்றுக்கள் வலுவிழந்து காணப்படுகின்றன. அவர்களது ஒட்டுமொத்த நிராகரிப்பு என்ற போக்கு சமூகத்தில் எடுபடாமல் போனதோடு ஆபத்தான / ஆபத்தற்ற நிதி மூலங்கள் என்ற வேறுபாடுகளைக் கூடச் சுட்டிக்காட்டத் தவறியுள்ளன. அவ்வாறே அன்னிய நிதி தொடர்பான விமர்சனமற்ற வாதங்களும் ஆபத்தானவையே. 

நிதி மூலங்களை வேறுபடுத்தி அறிவது மிக முக்கியமானது. நேரடி உளவுப்பணிகள், கருத்தியல் உருவாக்கங்கள், மனிதாபிமானப் பணிகள், கல்விப் பணிகள் என்ற வெவ்வேறு துறைகளில் இந்நிதி இயங்குகின்றது. இவற்றை வேறுபடுத்தாமல் ஒட்டு மொத்தமாக நிராகரித்துவிட்டோ அல்லது விமர்சனமற்று ஏற்றுக் கொண்டுவிட்டோ போக முடியாது.

உதாரணமாக நான் தொடர்புபட்டுள்ள Knowledge preservation தொடர்பான செயற்பாடுகளில் மிக முக்கியமாக 3 விடயங்களைப் பார்க்க முடியும்.
* செயற்பாட்டின் வெளிப்படைத்தன்மை ( Transparency )
* வெளிப்பாடுகளின் திறந்த அணுக்கம் ( Open Access )
* அறிவு மீளுருவாக்கத்திற்கான அனுமதி ( Creative Common Licence )
மேற்படி மூன்று விடயங்களையும் மக்கள் நலன் சார்ந்து பொருத்திப் பார்த்தால் போதுமானது என நம்புகின்றேன்.

இவ்வாறு சகல துறைகளும் அன்னிய நிதிக் கையாளுகை தொடர்பான மக்கள் நலன் சார்ந்த சட்டகத்தை உருவாக்கும் போது அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளைக் குறைக்க முடியும் என நம்புகின்றேன். ஜெயமோகனுடைய 'பொதுமைப்படுத்தல்களும்' சுகுணா திவாகரின் 'தொட்டனைத்தூறும்' கட்டுரைகளும் அன்னிய நிதிய நிதியை எதிர்கொள்ள அல்லது அன்னிய நிதியின் பாதங்களை எதிர்கொள்ள சரியான சட்டகங்களை அமைப்பதற்கு உதவாது என்று நம்புகின்றேன்.

No comments:

Post a Comment