Thursday, July 5, 2012

இந்துத்துவம் எதிர் சிறுதெய்வ வழிபாடு


@Rajan Kurai : காலம்தோறும் மாறிவரும் ஜாதிகளின் சமூகப்பாத்திரத்தை எப்படி எதிர்கொள்வது என்பதை தொடர்ந்து மறுபரிசீலனை செய்வதே சிந்தனைகளுக்கு முக்கியமானதாகும். "ஜாதியின் குறியியக்கம்" என்ற என்னுடைய கட்டுரை அந்த நோக்கில் எழுதப்பட்டதுதான். எனவே ஜாதியை காரணம் காட்டி நமது பண்பாட்டின் பல்வேறு அம்சங்களிலிருந்து நாம் துண்டித்துக்கொள்ள முடியாது. இதெல்லாம் குறித்து நாம் நிறைய விவாதிக்கலாம்; தொடர்ந்து ஆய்வுச்செயல்பாடுகள்,கோட்பாட்டாங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன.

@Gnani Sankaran : ராஜன் குறை , பண்பாட்டின் அம்சங்களை ஜாதியிடமிருந்து துண்டிப்பது எப்படி என்பதுதான் அராவும் நானும் முன்வைக்கும் முக்கியக் கேள்வி. அது பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடப்பது ஆரோக்கியமான போக்கேயாகும்.

மேற்படி உரையாடலில் கவனத்தை ஈர்த்த விடயங்களை மேலே குறிப்பிட்டுள்ளேன். இப்புள்ளியை மையப்படுத்திய உரையாடல்கள் தமிழ்ச்சூழலில் நிகழ்ந்துள்ளதா என்பதை அறிய ஆவல். மேலும், துறை சார்ந்த முன்னேற்றத்திற்கப்பால் அவை அரசியல் தளத்திற்கு கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏதாவது உள்ளதா?

பெரியாரியலும் நாட்டார் தெய்வங்களும் : http://tinyurl.com/d62x4g5
நிறுவனமயப்பட்ட இந்துத்துவத்தையும் சிறுதெய்வ வழிபாட்டு மரபுகளையும் வேறுபடுத்தும் செயற்பாடுகளை தொ. பரசிவன் அவர்கள் சரியாகச் செய்துள்ள போதிலும் பெரியாரும் அதையே வலியுறுத்தினார் என்பதற்கான சரியான ஆதாரங்களைத் தரவில்லை என்று நம்புகின்றேன். அல்லது, நிறுவனமயப்பட்ட இந்துத்துவத்திற்கு எதிரான பெரியாருடைய நிலைப்பாட்டை பரமசிவன் அவர்களே தனது நிலைப்பாட்டிற்கு நீட்டி வளர்த்துச் செல்கின்றாரா எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment